பெண் பலாத்காரம்- சித்த வைத்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தருவை ஆலங்குளத்தை சேர்ந்தவர் புனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். அங்கேயே விடுதியில் தங்கியிருக்கும் இவரை விஷ வண்டு கடித்துள்ளது.
இதனால் அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த இவர் மருதகுளத்தில் உள்ள ஆல்ட்ரின் ஜோசப் என்ற சித்த வைத்தியரிடம் சிகிச்சைக்காக தந்தையுடன் சென்றார்.
பெண்ணின் தந்தையை வெற்றிலை, பழம் வாங்கி வருமாறு கூறி அனுப்பிவிட்டு அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் ஆல்ட்ரின். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இது குறித்து அந்தப் பெண் மூன்றடைப்பு போலீசில் புகார் செய்ததையடுத்து போலீசார் ஆல்ட்ரின் ஜோசப்பை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications