வீரப்பன் கூட்டாளி ரங்கசாமி விடுதலை
Subscribe to Oneindia Tamil
கோவை: சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான ரங்கசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வீரப்பனின் கூட்டாளியான ரங்கசாமி (30) கடந்த 1996ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மத்திய சிறையி்ல் அடைக்கப்பட்டிருந்த இவர் பின்னர் கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாமலும், நடக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார்.
இந் நிலையில் கோவை சிறையில் சிறைத்துறை ஐ.ஜி. நடராஜ் ஆய்வு செய்தார். ஆய்வில் நன்னடத்தை அடிப்படையில் ரங்கசாமியை விடுதலை செய்ய நடராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து உடனடியாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications