துபாய் அட்லாண்டிஸ் ஹோட்டல் தீயில் சேதம்
துபாய்: துபாயில் உள்ள பிரபல அட்லாண்டிஸ் ஹோட்டலில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில், ஹோட்டலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
துபாயின் பாம் ஜூமைரா பகுதியில் உள்ள இந்த ஹோட்டல் 2.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும்.
இந்த ஹோட்டலின் லாபியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டலின் ஒரு பகுதி சேதமடைந்து விட்டது. விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹோட்டலில் உள்ள தண்ணீர்த் தொட்டி உலகின் மிகப் பெரிய தண்ணீர்த் தொட்டிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோட்டலில் 1539 அறைகள் உள்ளன.
தீவிபத்து ஏற்பட்டபோது 270 பேர் ஹோட்டலில் இருந்தனர். அவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.
தீவிபத்தைத் தொடர்ந்து ஹோட்டல் உள்ள சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
துபாயில் கட்டப்பட்டு வரும் பெரிய கட்டடங்களில் தீவிபத்து தடுப்பு வசதிகள் சரிவர செய்யப்படுவதில்லை என்ற புகார் உள்ளது. கடந்த மாதம் நடந்த ஒரு தீவிபத்தில் பத்து இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் இந்த ஆண்டு இதுவரை 12 தீ விபத்துக்கள் நடந்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications