மூடப்பட்ட அமெரிக்கன் கல்லூரி திறப்பு-மரத்தடியில் வகுப்புகள்
மதுரை: கல்லூரி முதல்வர் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து மூடப்பட்ட மதுரை அமெரிக்கன் கல்லூரி இன்று திறக்கப்பட்டது. ஆனால் வகுப்பறைகள் மூடப்பட்டிருந்ததால் மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டது.
அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்து வந்த ஜோசப் சின்னராஜ் சமீபத்தில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில், பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர், ஜார்ஜ் செல்வக்குமாரை புதிய முதல்வராக அறிவித்தார்.
இதற்கு ஆசிரியர்களில் ஒருதரப்பினரும், மாணவ, மாணவியரும் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பதவியேற்க ஜார்ஜ் செல்வக்குமார் வந்தபோது பெரும் மோதல் வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தி மாணவ, மாணவியரைக் கலைத்தனர்.
இதையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஜார்ஜ் செல்வக்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்பறை எதுவும் திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும் ஆசிரியர்கள் அவர்களை மரத்தடிகளில் அமர வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தனர்.
முதல்வர் விவகாரம் தொடர்பாக மாணவ, மாணவியர் கவலைப்படாமல், பாடங்களில் கவனம் செலுத்தி தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
-
இந்துக்களின் ஒரே பாதுகாப்பு திமுக.. பிடிஆரை வைத்து கொண்டு சொல்கிறேன்.. மதுரையில் கனிமொழி சம்பவம் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications