கோவில் விழா, கோஷ்டி மோதல்-ஒருவர் கொலை
பெரியகுளம்: பெரியகுளத்தில் கோவில் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அம்பேத்கார் நகரில் காளியம்மன் கோவில் உள்ளது. நகராட்சியில் பில் கலெக்டராக இருப்பவர் காமராஜ். அம்பேத்கார் நகரில் இவரது மைத்துனர் கருப்பையா வசித்து வருகிறார்.
இவர்கள் இருவருக்கும் இடையே கொய்யாதோப்பை குத்தகைக்கு எடுப்பதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந் நிலையில் அம்பேத்கார் நகரில் உள்ள காளியம்மன் கோவில் விழாவில் சாமி கும்பிடும் போது இவர்கள் இரு தரப்பினர்க்கு இடையே கடும் மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் வேல், அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது கருப்பையா வீட்டிற்கு விருந்துக்கு வந்த பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த கோமதி, சுப்புலட்சுமி, கள்ளிச்சி, ரவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் டிஎஸ்பி கனகராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications