ஸ்ரீநகரில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் இன்று காலை 10.32 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்று ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த மக்கள் பீதியடைந்தனர். கட்டடங்கள் குலுங்கியதை அடுத்து வீடு மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறிய மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
உயிர்சேதம், பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications