3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை-தாய் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: வறுமையின் காரணமாக 3 குழந்தைகளை, பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் சேலம் அருகே நடந்தது.
சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணனின் (35) மனைவி ஜெயலட்சுமி (27).
இவர்களுக்கு விக்ரம் (7), கோகுல் (4), பரதன் (4 மாதம்) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். இந்த குழந்தைகள் அப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பிணமாக மிதந்தனர்.
தகவலறிந்த போலீஸார் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்,
கடும் வறுமையில் வாடியதால் மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் ஜெயலட்சுமியே கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications