For Daily Alerts
Just In
துபாய் ஹெலிகாப்டர் விபத்து: 2 இந்தியர் உள்பட 7 பேர் பலி
துபாயில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் உள்ள பெட்ரோபேக் நிறுவனத்துக்கு சொந்தமான ரஷீத் கிணறி்ல் இருந்து ஏரோகல்ப் பெல் 212 ரக ஹெலிகாப்டர் 5 பயணிகள், 2 விமானிகளுடன் கிளம்பியது.
அப்போது எண்ணெய் தோண்டும் ட்ரில்லிங் ரிக் கருவி மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி வெடித்து சிதறி கடலுக்குள் விழுந்ததில் அதில் பயணி்த்த 2 இந்தியர்கள், ஒரு அமெரிக்கர், ஒரு இங்கிலாந்துகாரர் உள்பட 7 பேர் இறந்தனர்.
இந்த சம்பவத்தின்போது எண்ணெய் கிணற்றிலும் தீப்பிடித்துக் கொண்டது. அந்தத் தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
Comments
Story first published: Friday, September 5, 2008, 16:05 [IST]