For Daily Alerts
Just In
சண்டீகர், இமாச்சல், காஷ்மீரில் நிலநடுக்கம்
சண்டீகரில் இன்று காலை 11.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதையடுத்து மக்கள் கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
அதே போல இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலா, கங்க்ரா, சம்பா ஆகிய பகுதிகளிலும் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.4 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
அதே போல காஷ்மீர் மாநிலத்திலும் இன்று காலை 11.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. கடந்த 24 மணி நேரத்தில் இப் பகுதியில் ஏற்பட்டுள்ள இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல தோடா, பூன்ஜ் மாவட்டங்களிலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
Comments
Story first published: Saturday, September 6, 2008, 15:21 [IST]