திண்டுக்கல்-கொடை பராமரிப்பு பணி: ரயில்கள் ரத்து-நேரம் மாற்றம்
மதுரை:திண்டுக்கல்-கொடைரோடு ரயில் நிலையங்களுக்கு இடையில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளையும், 14ம் தேதியும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திண்டுக்கல்-கொடைரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே ரயில்களின் போக்குவரத்து, செப்டம்பர் 7 மற்றும் வரும் 14ம் தேதிகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி வண்டி எண் 711 / 712 மதுரை- திண்டுக்கல்- மதுரை ரயில் மற்றும் 715 / 716 திண்டுக்கல்- மதுரை- திண்டுக்கல் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
இந்த இரு தினங்களிலும் வண்டி எண் 826 / 826ஏ திருநெல்வேலி- ஈரோடு- மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 5.15 மணிக்குப் பதிலாக காலை 7 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 6352 நாகர்கோயில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வாரம் இரு முறை) நாகர்கோயிலிலிருந்து அதிகாலை 4.50 மணிக்குப் பதிலாக காலை 7.05 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications