கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் இறந்தார்.
சங்கரன்கோவில் அருகில் உள்ள ஆயாள்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு சுபாரிஷி என்ற மகளும், மகாராஜன், ரமேஷ், பாஸ்கர் என்ற மகனும் உள்ளனர்.
நேற்று வெள்ளத்துரைக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்து ராஜலட்சுமி மயங்கி விழுந்தார். அவரையும் அதே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரும் இறந்தார்.












Click it and Unblock the Notifications