மாணவியை மிரட்டி கற்பழித்த கொத்தனாருக்கு வலை

Subscribe to Oneindia Tamil

குளச்சல்: பள்ளி மாணவியை கொலை செய்துவிடுவதாக கூறி கற்பழித்த கொத்தானாரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது குடும்பத்தாரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

குளச்சல் அடுத்த கருங்கல் பகுதியை சேர்ந்தவர் தங்கம். இவரது மகள் சுபா. 8ம் வகுப்பு படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தங்கத்தின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கவனித்து கொள்வதற்காக தனது மகள் சுபாவை பாட்டி வீட்டிற்கு தங்கம் அனுப்பி வைத்தார்.

பாட்டி வீட்டில் இருந்த சுபாவை செம்புவிளை பகுதியைச் சேர்ந்த கொத்தனார் ரமேஷ் என்பவர் வலுக்காட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக ரமேஷ் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சுபாவை, மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுபாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அவரது பெற்றொர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில், சுபா 5 மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சுபாவிடம் விசாரித்தனர். நடந்த விவரங்களை சுபா கூறினார். இதுகுறித்து சுபாவின் தந்தை மாவட்ட எஸ்பியிடம் மனு கொடுத்தார். இதையடுத்து ரமேஷ், அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவர்களை குளச்சல் போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+