அணுகுண்டு சோதனையை தடுக்க முடியாது: கலாம்
டெல்லி: நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை யாராலும், எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு என்எஸ்ஜி ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்தியாவால் அணுகுண்டு சோதனை நடத்த முடியுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இதுகுறித்து தனியார் டிவிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
இந்த அணு ஒப்பந்தம் நாட்டுக்கு மிகவும் அவசியம். என்எஸ்ஜி ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டின் முக்கியத்தும், நலன் கருதி, அவசியம் ஏற்பட்டால் இந்தியா அணுகுண்டு சோதனை செய்வதை யாராலும், எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது.
சர்தேச நிலைமையின் காரணமாக நாம் அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிலை வந்தால் நாம் அணுகுண்டு சோதனையை நடத்தலாம். இதுபோன்ற நிலைகளில் என்எஸ்ஜி நாடுகள் காரணங்களை பார்க்க வேண்டும்.
அவர்கள் நமக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறலாம். ஆனால் நாட்டின் நலனுக்கே நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications