பரமக்குடி அருகே பேய் விரட்டும் திருவிழா
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பேய் விரட்டும் விழா நடைபெற்றது. பேய் பிடித்ததாக கூறப்பட்டவர்களுக்கு சடங்குகள் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ளது கலையூர் கருமலையான் கோவில். இங்கு ஆண்டு தோறும் பேய் விரட்டும் திருவிழா நடந்து வருகிறது. இந்தாண்டு பேய் விரட்டும் திருவிழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
பேய் பிடித்ததாக கருதப்பட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவிலில் இருந்து சாமியாடிகள், குறிசொல்லி பேய் பிடித்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் விபூதி பூசி பேய் விரட்டினர். பின்னர், அப்பெண்கள் குளத்தில் நீராடி கோவிலை வலம் வந்தனர்.
தொடர்ந்து பல சடங்குகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications