திருச்சியில் கலைஞர் அறிவாலயம்-கருணாநிதி திறந்து வைக்கிறார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் கருணாநிதி வரும் 21ம் தேதி திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து திருச்சியில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுகவின் முப்பெரும் விழா மற்றும் கலைஞர் அறிவாலயத் திறப்பு விழாவில் பங்கேற்க வரும்21ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி திருச்சி வருகிறார். காலை 8 மணிக்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
9.30 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசுகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications