Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு 3 மடங்கு ஊதிய உயர்வு

Subscribe to Oneindia Tamil

President of India
டெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு 3 மடங்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொருளாதார விவகார கமிட்டி கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆளுநர் ஆகியோருக்கான சம்பள உயர்வு தொடர்பாக கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி 300 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜனாதிபதியின் ஊதியம் ரூ.50,000ல் இருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதிக்கு ரூ.40,000ல் இருந்து ரூ.1.25 லட்சமும், மாநில ஆளுநர்களுக்கு மாத ஊதியம் ரூ.36,000ல் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு கடந்த 2007 ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் கடந்த 21 மாத ஊதியம் அரியர்ஸாக வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+