தமிழகத்துக்கு கூடுதலாக 5000 டன் கோதுமை ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் இந்த மாதம் வழங்குவதற்காக 11,283 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5000 டன் கோதுமை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் இந்த மாதத்திற்கான கோதுமை வழங்க, 3783 டன் என்ற வழக்கமான ஒதுக்கீட்டுடன், 2500 டன் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி மொத்தம் 8283 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதத்திற்கு மேலும் கூடுதலாக 5000 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி மொத்தம் 11,283 டன் கோதுமை செப்டம்பர் 2008 மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
கோதுமை பெறுவதில் குறைகள் இருப்பின் சென்னை துணை ஆணையர் (வடக்கு) அல்லது துணை ஆணையர் (தெற்கு), மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட உதவி ஆணையரை, வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications