அண்ணா பிறந்த நாளுக்கு விடுமுறை-திமுக கோரிக்கை
புதுச்சேரி: அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில அரசை அம்மாநில திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி மாநில திமுக செயற்குழு கூட்டம் முத்தியால்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் எம்பி சி.பி.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் திமுக சார்பில் கொண்டாடுவது.
கட்சிக் கொடி ஏற்றி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி ஆண்டு முழுவதும் கொண்டாடுவது நூற்றாண்டு விழை எடுப்பது. அண்ணாவின் நூற்றாண்டு பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி அரசால் தொடங்கப்பட உள்ள புதிய திட்டத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா திட்டம் என்று பெயர் சூட்ட வேண்டும் கோரிக்கை விடுப்பது என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications