இலங்கையில் காயமடைந்த 2 இந்திய பொறியாளர்கள்-விவரம் வெளியிட்டார் வைகோ

அவர்களது பெயர் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் ஆகும்.
கோவையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
மன்னிக்க முடியாத குற்றத்தை தமிழர்களுக்கு, மத்திய அரசு செய்து வருகிறது. ஒகேனக்கல், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளிலும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இலங்கையில் தமிழர்கள் பசி, பட்டினியில் வாடுகின்றனர். ஆனால், ராணுவ வீரர்கள், ராணுவ தொழில்நுட்ப பொறியாளர்களை மட்டும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இவர்கள், இலங்கை அரசின் கூலிப்படையாக செயல்படுகின்றனர்.
8ம் தேதி, இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப் புலிகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில், இலங்கையின் விமானப் படை ராடார் கருவி பலத்த சேதமுற்றுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ பொறியாளர்கள் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இந்திய தூதரகத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர், "இலங்கை ராணுவத்துக்கு உதவியாக இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொறியாளர்கள் 265 பேர், இலங்கையில் இருக்கின்றனர்' என கூறியுள்ளார். இது தமிழர்களுக்கு, மத்திய அரசு செய்த துரோகம்.
இதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே முழு காரணம். இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி, தேவைப்படும் நேரத்தில் போராடுவோம்.
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவி பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விரிவாக விளக்கி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார் வைகோ.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஏலே பேதில போவ.. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398! இலங்கை மேல் விழுந்த இடி.. அடியை தாங்குவாரா அனுரகுமார! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications