நானா: மே. வங்க அரசு - டாடா ஒப்பந்தத்தை வெளியிட தடை
கொல்கத்தா: சிங்கூரில் நானோ ஆலை அமைப்பது தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிட கொல்கத்தா உயர்நீதிமன்றம் 2 வார கால தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக டாடா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி தீபாங்கர் தத்தா இந்த தடையை விதித்தார். அடுத்த வெள்ளிக்கிழமை இந்த மனு மேல் விசாரணைக்கு வரும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தாக்கல்செய்திருந்த மனுவில், தங்களது வர்த்தக நலனை முன்னிட்டு இந்த ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.
டாடா - அரசுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதையடுத்து ஒப்பந்தத்தின் ஒருபகுதியை கடந்த திங்கள்கிழமை மேற்கு வங்க அரசு வெளியிட்டது. இதையடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்றத்தை அணுகியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications