சென்னையில் உஷார் நிலை
சென்னை: டெல்லி தாக்குதலைத் தொடர்ந்து மும்பை, சென்னை ஆகிய நகரங்கள் உச்சகட்ட பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அடுத்து டெல்லியும், சென்னையும் தீவிரவாதிகளின் இலக்காக இருக்கும் என குஜராத் போலீஸார் மத்திய அரசை எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
இதையடுத்து சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகர எல்லைகள் அனைத்தும் தீவிர வாகன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் அனைத்தும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்படுகின்றன.
சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications