பாமகவின் தமிழோசை நாளிதழுக்கு விளம்பரம் நிறுத்தப்படவில்லை: அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பு போலவே அரசு விளம்பரங்களை தொடர்ந்து வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழோசை நாளிதழ் தொடர்ந்த வழக்கை பைசல் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமகவின் சார்பில் நடத்தப்பட்டு வரும் நாளிதழ் தமிழோசை. இந்த நாளிதழ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழோசை சார்பில் அதன் பதிப்பாளரும், பாமக தலைவருமான ஜி.கே.மணி தாக்கல் செய்திருந்த மனுவில், திமுக பாமகவுனான உறவை முறித்துக் கொண்ட பின்னர், ஜூன் 15ம் தேதி முதல் தமிழோசை நாளிதழுக்கு தரப்பட்டு வந்த அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு விட்டது.

எனவே முன்பு போலவே தமிழோசை நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவுக்கு அரசு சார்பில்அளிக்கப்பட்ட பதிலில், இன்று வரை தமிழோசை நாளிதழுக்கு வழக்கம் போலவே விளம்பரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த காரணத்தைக் கொண்டும் விளம்பரங்கள் நிறுத்தப்படவில்லை. இதுதொடர்பாக தமிழோசை கூறும் வாதம் தவறானது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், அரசின் வாதத்தை பதிவு செய்து கொள்வதாக கூறி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+