இன்றும் 'அஸ்த்ரா' ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
பாலஸோர் (ஒரிஸா): இந்தியாவின் சிறிய ரக ஏவுகணையான அஸ்த்ரா, 2வது நாளாக இன்றும் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையும் வெற்றி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ணிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணை அஸ்த்ரா. ஒரிசாவின் சந்திப்பூர் கடல் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நேற்று அஸ்த்ரா ஏவி பரிசோதிக்கப்பட்டது.
இன்றும் இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. முற்பகல் 11.47 மணிக்கு இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையும் வெற்றி அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 முதல் 40 கிலோமீட்டர் தொலைவிலான இலக்கைத் தாக்கக் கூடிய வல்லமை படைத்தது அஸ்த்ரா.












Click it and Unblock the Notifications