விநாயகர் சிலை ஊர்வலம்: பலத்த பாதுகாப்பில் மும்பை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி முடிவையொட்டி சிலை ஊர்வலம் தொடங்கியது. இதையடுத்து நகர் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பத்து நாட்களாக நடந்து வந்த விநாயகர் சதுர்த்தி விழா இன்றுடன் மும்பையில் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி இன்றுகாலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர்சிலை ஊர்வலங்கள் தொடங்கின.

இதையொட்டி நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெல்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மும்பை முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிலை ஊர்வலங்கள் அமைதியான முறையில் நடந்து வருவதாகவும், இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் ஹைதராபாத் நகரிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+