இலங்கைக்கு தப்ப முயன்ற 7 அகதிகள் கடலில் மூழ்கி பலி
ராமேஸ்வரம்: மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு தப்ப முயன்றபோது, படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள், குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 அகதிகளை கடற்படை பத்திரமாக மீட்டது.
இலங்கையில் கடுமையான போர் நடந்து வருவதால் அங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மாநிலம் முழுவதும் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில அகதிகள் போலீஸாருக்கு தெரியாமல் கள்ளத்தோணி மூலம் மீண்டும் இலங்கைக்கு செல்கின்றனர். கடற்படையினர் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை, பழனி, திருவண்ணாமலை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பெண்கள் உள்பட 13 அகதிகள் இலங்கைக்கு தப்பிச் செல்ல மண்டபம் வந்தனர். கள்ளத்தோனி மூலம் இலங்கைக்கு செல்வதற்காக ஏஜெண்ட் ஒருவரிடம் தலா ரூ.6,000 கொடுத்து ஏற்பாடு செய்துள்ளனர்.
கடந்த 11ம் தேதி இரவு 9 மணியளவில் நாட்டுபடகு மூலம் இலங்கைக்கு புறப்பட்டனர். பௌர்ணமி என்பதால் கடந்த சில தினங்களாக கடல் கொந்தளித்து வருகிறது. படகோட்டியும் குடிபோதையில் இருந்துள்ளார்.
இருட்டில் கடலலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திசைமாறி படகு சென்றது. நேற்று முன்தினம் தனுஷ்கோடி 3 மற்றும் 4வது தீடைக்கு இடையி்ல் நடுக்கடலி்ல் படகு சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அலைகளால் பயங்கரமாக தாக்கப்பட்டு படகு கவிழ்ந்தது. இதில் 13 பேரும் நீரில் மூழ்கினர். உயிர் தப்புவதற்காக 3ம் தீடை நோக்கி நீந்தினர்
ஆனால் பெண்களால் கடல் அலைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இதில் பூமணி (68) , ரெஜினால்டு என்பவரது மனைவி சகாயமேரி (27), நித்யா (25), கோபிகா (7) மற்றும் ஒரு ஆண்குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியானார்கள்.
இதயராணி (42), செல்வநாதன் (25), ரெஜினால்டு , ரவி, சுமன் மற்றும் படகோட்டி ஆகியோர் உள்பட 7 பேர் நீந்தி 3ம் தீடையில் கரையேறினர். நாள் முழுவதும் பசி, தாகத்தால் தவித்தனர். பின்னர், படகு கொண்டு வருவதாக கூறி படகோட்டி நீந்தி சென்றார். போலீஸாருக்கு பயந்து ரவி, சுமன் மற்றுமொருவர் கடலில் குதித்த நீந்தி அரிச்சல்முனைக்கு தப்பித்தனர்.
3ம் தீடையில் 3 பேர் தவித்துக் கொண்டிருப்பதாக கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தவித்துக் கொண்டிருந்து ரெஜினால்டு, இதயராணி, செல்வநாதன் ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications