ஆந்திரா- கால்சென்டர்களில் காண்டம் மெஷின்!!
ஹைதராபாத்: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் பரவலைத் தடுக்க ஆந்திர கால் சென்டர்களில் காண்டம் (ஆணுறை) விற்கும் தானியங்கி மிஷின்கள் நிறுவப்படவுள்ளன.
முதல் கட்டமாக ஹைதராபாத்தின் முக்கிய கால்சென்டர்கள் அனைத்திலும் இந்த மெஷின்களை நிறுவன ஆந்திரப் பிரதேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட கால்சென்டர் நிறுவன உரிமையாளர்கள் அனைவரிடமும் இதுகுறித்துப் பேசப்பட்டு விட்டதாகவும், அவர்கள் ஒப்புதலுடன் இன்னும் சில தினங்களில் இந்த மெஷின்கள் நிறுவப்படும் என்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக இயக்குநர் சந்திரவதன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தின் கால்சென்டர்களில் மொத்தம் 1 லட்சம் ஆண், பெண்கள் பணியில் உள்ளனர்.
அரசு அலுவலகங்களிலும்...
மேலும் ஆந்திர மாநில தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் அந்த காண்டம் விற்பனை மெஷின்களை நிறுவ அனுமதி கேட்டுள்ளது எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம்.
மேலும் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் ஆண்டில் 16 மணி நேரங்கள் செக்ஸ் கல்வி போதிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இதற்காக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உதவியுடன் ஒரு தனிப் பாடத்திட்டம் மற்றும் கல்வி உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரவதன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுமுதல் 16500 பள்ளிகள் மற்றும் 950 கல்லூரிகளில் இந்தத் திட்டத்தைத் தொடங்க உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications