அதிமுகவில் மீண்டும் சேலம் கண்ணன்!
சென்னை: ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி. சேலம் கண்ணன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பியுள்ளார்.
ஜெயலலிதாவின் மிகத் தீவிர விசுவாசிகளில் ஒருவராக இருந்தவர் சேலம் கண்ணன். ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபோது அவருக்கு பக்க பலமாக இருந்தவர், அவரை தீவிரமாக ஆதரித்தவர். இதனால் எம்.ஜி.ஆரின். கோபத்திற்கும் ஆளானவர். கட்சியில் ஓரம் கட்டப்பட்டவர். இருந்தாலும் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்து வந்தார் கண்ணன்.
பின்னர் ஜெயலிலதாவின் கையில் அதிமுக வந்தபோது கண்ணனை ஓரம் கட்டி விட்டார் ஜெயலலிதா. இருப்பினும் அதுகுறித்து எந்தவித முனுமுனுப்பும் இல்லாமல் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார் கண்ணன்.
இந்த நிலையில், சேலம் கண்ணன் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பியுள்ளார். ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்த கண்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.