வாஷிங்டனில் புஷ்-மன்மோகன் பேச்சுவார்த்தை
வாஷிங்டன்:ஐநா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் புஷ்சை சந்தி்க்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் வரும் 25ம் தேதி நடக்க உள்ள ஐநா பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார். அப்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச உள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செயதித் தொடர்பாளர் டானா பெரினோ கூறியதாவது:
டெல்லியில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. தீவிரவாதத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எல்லா வகையிலும் தேவையான உதவிகளையும் செய்யும்.
அமெரிக்கா வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை அதிபர் புஷ் சந்தித்து பேசுகிறார். இரு தலைவர்களும் தீவிரவாதம் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.
மன்மோகன் சிங்கின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாகவே இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டால் இரு தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications