கச்சத்தீவு-இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை எம்.பி கோரிக்கை
சென்னை: கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் ேசர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தின் கோரிக்கைக்கு இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் ஆதரவு ெதரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கும் நிலைமைக்கு முடிவு ஏற்படும்.
தமிழகத்திலிருந்து இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். இருப்பினும் இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இருப்பினும் கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற்றால், இலங்கைத் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் தாக்குவதாகவும், பிடித்துச் செல்வதாகவும் கூறப்படும் புகாரில் சற்றும் உண்மை இல்லை.
இலங்கையில் தற்போது ராஜபக்சே அரசு இனப் படுகொலையில் இறங்கியுள்ளது. இந்த எண்ணத்தோடுதான் இலங்கை ராணுவம் தற்போது தமிழர் பகுதிகளில் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க இலங்கை முயலுகிறது. அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் குறி வைத்து தாக்கி அழித்து வருகிறது.
இளைஞர்கள் ராணுவத்தால் துன்புறுத்தப்படுகின்றனர். பெண்கள் கற்பழிப்பு கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு இந்தியா எந்த வகையிலான ஆதரவையும் தரக் கூடாது. இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகளையும் இந்தியா நிறுத்த வேண்டும்.
2 லட்சம் தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் உள்ளிட்டவை இல்ைல என்றார் சிவாஜி லிங்கம்.












Click it and Unblock the Notifications