திண்டிவனத்தில் தீ-14 வீடுகள் எரிந்து சாம்பல்!
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒரே நேரத்தில் 14 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
திண்டிவனம் அருகே உள்ளது தாடிக்காரன் குட்டை. இந்தப் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன்.
இவருடைய கூரை வீட்டில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
அதனைத் தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ மளமளவென பற்றி எரிந்தது.
தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதில் மொத்தம் 14 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இரா.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேதுநாதன் உள்பட பலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications