ராமதாசுடன் பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் சந்திப்பு

ராமதாஸை தங்களது கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயன்று வருவதாகத் தெரிகிறது.
திண்டிவனத்தையடுத்த ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. சுமார் 30 நிமிடங்கள் இந்தச் நடந்தது.
பின்னர் வெளியே வந்த ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையி்ல், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். சொந்த விஷயங்கள் குறித்து பேசிவிட்டு வந்தேன் என்று கூறிவிட்டு மேற்கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றார்.
ராமதாஸ் பேட்டி:
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
செப்டம்பர் 15ம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா கவியரங்கத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணாவை கலைஞர்கள் பாராட்டாமல் முதல்வர் கருணாநிதியை பாராட்டி இருக்கிறார்கள்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம், 50 ரூபாய்க்கு ரேஷனில் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து பாராட்டப்பட்டுள்ளது.
67 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை 50 ரூபாய்க்கு கொடுக்கும் திட்டம். 3 விரல்களால் கிள்ளி எடுத்தாலே இந்த பொருட்களின் எடை வந்துவிடும். எடையே போட தேவையில்லை. மக்களை ஏமாற்ற வேண்டும், அவர்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
75 கிராம் கடலைபருப்பு எதற்கு பயன்படும். இந்த திட்டத்திற்கு பதில் வேறு உருப்படியான திட்டத்தை செயல்படுத்துங்கள்.
டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். அவைகளை ரேஷன் கடைகளாக மாற்றுங்கள். இந்த ரேஷன் கடைகளில் அனைத்து உணவு மற்றும் காய்கறிகள் பொருட்களை விற்பனை செய்யுங்கள். சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட மானிய பொருட்களை விற்பனை செய்யுங்கள்.
மாநில அரசின் வெப்சைட்டின் அதிகார தகவலின்படி 31.3.08ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் 49 லட்சத்து 58 ஆயிரத்து 231 பேர். இவர்களில் 2 லட்சம் பேருக்காவது வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரப்படுமா?.
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அனைத்தையும் திமுக அரசு பிரசாரம் செய்து வந்துள்ளது. இந்த சாதனைகளை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளாமல் பலமுறை திமுகவை தேர்தலில் தோற்கடித்து உள்ளனர்.
திமுக அரசு பதவிக்கு வந்த ஓரிரு ஆண்டுகளில் ஆடம்பர விழாக்கள் நடத்தி இலவச நிலம் வழங்கினார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எங்கும் நிலம் வழங்கப்படவில்லை. அந்தத் திட்டமே முடங்கிப்போய் விட்டது.
சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது. மதவாத சக்திகள் மதவாதத்தை தூண்டிவிட்டு ஆதாயம் பெறவேண்டும் என குறுகிய அரசியல் நடத்துவதற்காக சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதும் ஒரு பயங்கரவாதம் தான். இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் மத உரிமையும் உள்ளது. ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். மற்றவர்களுக்கு மதம் குறித்து போதிப்பதற்கும் நமது அரசியல் சட்டம் உரிமை வழங்கியுள்ளது என்றார் ராமதாஸ்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications