அரிசி கடத்தல்.. அமைச்சர் பேச்சு: ஜெ. விளாசல்
சென்னை: அரிசிக் கடத்தலையும் மனதில் வைத்துத்தான் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை திமுக அரசு தீட்டியுள்ளது என்று பேசியுள்ள அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான் மீது முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலியில் நடந்த ஓர் அரசு விழாவில், அமைச்சர் மைதீன்கான் பேசுகையில், அரிசி கடத்தலுக்கும் சேர்த்து கணக்கு பார்த்து தான் இந்தத் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறோம். கடத்தல் தவிர்க்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் திமுகவினரால் அரிசிக் கடத்தல் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அரிசிக் கடத்தலை ஆதரித்து பேசிய அமைச்சரின் மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா?
மணல், சர்க்கரை, அரிசி போன்ற பொருட்களை கடத்தியது போதாது என்று தற்போது மளிகைப் பொருட்களையும் திமுகவினர் கடத்துவதற்கு கருணாநிதி வழி செய்து கொடுத்திருக்கிறார். இது ஓர் ஏமாற்று திட்டம். மக்கள் இந்த கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை.
கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பொருளாதார நெருக்கடி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர்களாலேயே மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து போன்ற அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications