ரயிலை மறித்து கச்சா எண்ணை திருட்டு-விஷவாயு கசிவில் 25 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

Assam map
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லோங்க் மாவட்டத்தில் சரக்கு ரயிலிலிருந்து கச்சா எண்ணையை திருட வந்தவர்களில், விஷ வாயு கசிவு மற்றும் டேங்கர் வெடித்ததில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாய்டிங் என்ற இடத்தில் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பாதை வழியாக கச்சா எண்ணையை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு ரயிலை 70க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒரு டேங்கரிலிருந்து கச்சா எண்ணையை திருட ஆரம்பித்தனர்.

ஆனால்துரதிர்ஷ்டவசமாக அந்த டேங்கரிலிருந்து விஷ வாயு கசிந்துள்ளது. மேலும் அந்த டேங்கரும் திடீரென வெடித்துள்ளது. இதையடுத்து 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணை விமானங்களுக்கான அதிக சக்தி கொண்ட எரிபொருளாகும்.

இந்த சம்பவம் நாகாலாந்து-அஸ்ஸாம் எல்லையில் நடந்துள்ளது. இறந்தவர்களில் பலர் நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நாகா தீவிரவாதிகளும் அடக்கம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் இப்படி அடிக்கடி டேங்கர் ஏற்றிக் கொண்டு வரும் ரயில்களை மறித்து கொள்ளை அடிப்பது நடந்து வருகிறது. தீவிரவாதிகள்தான் பெரும்பாலும் இவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த முறை அது அவர்களுக்கு எமனாக அமைந்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+