குற்றாலம்-மேற்குத் தொடர்ச்சி மலையில் பயங்கர தீ
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையிலும் பழைய குற்றாலம் பகுதியிலும் 3 கி.மீ. பரப்பளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதி்ல் ஆயிரக்கணக்கான மரங்களும், மூலிகைச் செடிகளும் எரிந்துவிட்டன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ கொளுத்து விட்டு எரிந்தது. இரவு 7 மணியளவில் அந்த தீ பழைய குற்றால வனப்பகுதிக்கும் பரவியது.
மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சிப் பகுதியில் சுமார் 3 கிமீ தொலைவிற்கு எரிந்த தீயில் ஏராளமான மரங்களும், மூலிகை செடிகளும் கருகின. தகவலறிந்ததும் குற்றாலம் பகுதி வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் வனக்காவலர்கள், தீத்தடுப்பு பயிற்சி பெற்ற காவலர்கள் உள்பட மொத்தம் 60 பேர் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நவீன கருவிகள் எதுவும் இல்லாததால் தீயை விரைவில் அணைக்க முடியவில்லை. காற்று வேகமாக வீசுவதால் தீ வேகமாக பரவி வருகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications