மதுரை மாநகராட்சி இடை தேர்தல் முடிவு-அறிவிக்க தடை
மதுரை: மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவுகளை வெளியிட மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னையில் 2 மாநகராட்சி வார்டுகள், மதுரையில், 52வது வார்டு ஆகியவை உள்ளிட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
இதில் மதுரையில் பெரும் மோதல் மூண்டது. பெருமளவில் கள்ளஓட்டுக்கள் போடப்பட்டதாக அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின. திமுகவினர் நடத்திய தாக்குதலில் சிபிஎம் தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
சென்னையிலும், திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக சர்ச்சை எழுந்தது. திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதலும் மூண்டது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில், 52-வது வார்டு இடைத் தேர்தலில் திமுக வினர் வன்முறையை கட்ட விழ்த்து விட்டது தொடர்பாக அதிமுக வேட்பாளர் வி.மலைச்சாமி மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.முருகேசன், பி.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. இருந்தாலும் மனுதாரரின் அவசரத்தை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம்.
ஆனால், மறு உத்தரவு வரும் வரை வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தர விட்டனர்.
வழக்கு விசாரணையை வருகிற செப்-23ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications