செல்போன் பேச்சை ஒப்பிட்டுப் பார்க்க பானு கருணா குரல்கள் பதிவு

Subscribe to Oneindia Tamil

Bhanumathi
சென்னை: விஜயன் கொலை வழக்கில் கைதான பானுமதி மற்றும் கருணா ஆகியோரது செல்போன் உரையாடலுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக அவர்களுடைய குரல்களை போலீஸார் பதிவு செய்தனர்.

எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் அவரது மனைவியின் தங்கை பானு என்கிற பானுமதி கைது செய்யப்பட்டார். விசாரணையில், விஜயனை சொத்துக்காக ஆள் வைத்துக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார் பானு.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலையில் கூலிப்படை தலைவனாக செயல்பட்ட போலீஸார்காரர் கருணா, கார்த்திக், தீனா, சுரேஷ், சாலமன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணையில் இருவரும் சரிவர ஒத்துழைக்கவில்லை என்பதால் இருவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இருவரும் செல்போனில் பேசிக் கொண்ட உரையாடலில், அவர்களுடைய குரல்கள்தானா அவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இருவரின் குரல்களையும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

இந்த குரலை ஏற்கனவே கைப்பற்றப்பட்ட செல்போன் பேச்சுக்களுடன் ஒப்பிட்டு சோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+