இலங்கையில் இந்திய துருப்புக்கள் இல்லை: ராணுவ துணை தளபதி
ராமேஸ்வரம்: இலங்கையில் இந்திய துருப்புக்கள் இல்லை என்று ராணுவ துணைத் தளபதி எம்.எல்.நாயுடு தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் வந்த நாயுடு, கடலோரப் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கடற்படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமேஸ்வரத்தில் ராணுவத்தளம் அமைக்க வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் அது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
காஷ்மீருக்குள் ஊடுறுவ அவ்வப்போது பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு போன்ற தாக்குதல்களை நடத்தி முயன்று வருகிறது. ஆனால், நமது இந்திய ராணுவம் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வருவதால் எல்லை பகுதிகளில் ஊடுறுவல் குறைந்துள்ளது.
இலங்கையில் இந்திய துருப்புக்கள் இல்லை. அங்கு இந்திய வீரர்கள் யாரும் காயமடையவில்லை. அதேபோல, இலங்கையில் பாகிஸ்தான், தனது ராணுவ தளம் அமைக்க அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications