குஜராத்தில் நானோ?-மோடியுடன் டாடா எம்டி பேச்சு!
அகமதாபாத்: டாடாவின் நானோ கார் தொழிற்சாலையை மேற்கு வங்க மாநிலம் சிங்கூரிலிருந்து குஜராத்துக்கு மாற்றுவது தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியுடன் டாடா நிறுவனம் பேச்சு நடத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவிகாந்த், குஜராத்தில் நானோ தொழிற்சாலை அமைவதற்குப் பொருத்தமான இடம் குறித்து பேச்சு நடத்தியதாக டாடா செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் முடிவில் குஜராத்தின் தொழில் நகரமான முந்த்ராவில் இந்த ஆலையை நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ ஆலை தொடர்ந்து செயல்பட முடியாத நிலையை மம்தா பானர்ஜியும் அவரது ஆதரவாளர்களும் ஏற்படுத்தியிருப்பதால், தொழிற்சாலைப் பணிகளை நிறுத்திவிட்ட டாடா, இப்போது ரூ.1 லட்சம் நானோ கார் தொழிற்சாலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் வேலையில் மும்முரமாகிவிட்டது.
இந்நிலையில் 15க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் நானோ ஆலையைத் தொடங்குமாறு டாடாவை அழைத்துள்ளன. குறிப்பாக கர்நாடகம் ரொம்பவே ஆர்வம் காட்டியது.
இதையடுத்து கர்நாடக முதல்வருடன் டாடா மோட்டர்ஸ் எம்டி ரவிகாந்த் பேச்சு நடத்தினார். ஆனால், கர்நாடகத்தி்ல் ஆலையை அமைக்க டாடாவுக்கு ஆர்வமில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து இப்போது குஜராத் அரசுடன் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளது.
கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள முந்த்ராவில் ஏற்கெனவே டாடாவின் 4000 மெகாவாட் மின் உற்பத்தித் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலேயே நானோவுக்கு 1000 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தர மோடி அரசு முன்வந்துள்ளது.
முந்த்ரா ஒரு துறைமுக நகரம் என்பதால் இங்கு நானோ ஆலையைத் தொடங்க அதிக ஆர்வம் காட்டுகிறது டாடா.
இத் தொழிற்சாலைக்கு சிங்கூரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னரே, குஜராத்தில் கார் தொழிற்சாலை ஒன்று தொடங்கும்படி ரத்தன் டாடாவிடம் முதல்வர் நரேந்திர மோடி நேரடி கோரிக்கை வைத்திருந்து நினைவிருக்கலாம்.
பிரணாப் முகர்ஜி கருத்து:
இந்நிலையில் டாடா நானோ நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தைவிட்டு முழுமையாக வெளியேற முடிவெடுத்திருப்பது அந்த மாநிலத்துக்கே பெரும் பின்னடைவு என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications