தமிழகத்தில் தொடரும் சாதி கொடுமை: சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் சாதி கொடுமைகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் கூறினார்.

பி.இராமமூர்த்தி நூற்றாண்டு நிறைவு விழா மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் விவசாய தொழிற் சங்க மாநிலத் தலைவர் கோ.வீரய்யன் தலைமை வகித்தார். கே.வரதராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:

தோழர் பி. இராமமூர்த்தி சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக போராடியவர். சாதி ஒழிய, சாதிக் கொடுமைகள் தீர ஆண்டவன் வருகிறானோ இல்லையோ கண்டிப்பாக செங்கொடி இயக்கம் வரும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் சாதிய கொடுமைகள் நீடிக்கிறது. ஆனால் இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் சாதிய ஒடுக்கு முறைகள் இல்லை. அதற்கு காரணம் அங்கு மக்களோடு இணைந்த ஆட்சி நடைபெறுகிறது.

நாம் என்ன செய்ய வேண்டும் என அமெரிக்கா நமக்கு உத்தரவு போடுவதற்கு மன்மோகன் சிங் அமெரிக்காவிற்கு ஓடிச் சென்று கையெழுத்திடுகிறார். நல்லவேளை கடந்த நான்கு ஆண்டுகாலமாக 61 இடதுசாரி எம்பிக்கள் செய்த தியாகத்தால் திவாலாகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

உண்டியல் ஏந்துவதால் நாம் உறுதியோடு இருக்கின்றோம். சூட்கேஸ் வாங்கியவர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+