For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி ரயில்வே அலுவலகத்துக்கு குண்டு மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள வடக்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

டெல்லியில் பரோடா இல்லம் என்ற கட்டிடத்தில் வடக்கு ரயில்வேயின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு குண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார், மோப்ப நாய்கள் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த 13ம் தேதி டெல்லியில் தொடர் குண்டுவெடிப்புல் 24 பேர் பலியானார்கள். இந்நிலையில் இன்று வந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X