1045 கைதிகள் விடுதலையை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட் ஏற்பு
டெல்லி: அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு 1045 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட பொது நலன் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி 7 ஆண்டுகளை சிறையில் கழித்த 1045 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து ராஜாராம், கிருஷ்ணராஜ் உள்ளிட்ட நான்கு பேர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், இந்த விடுதலைக்கு தடை விதிக்க வேண்டும். விடுதலை ஆனவர்களைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என அப்போது மனுதாரர்களின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, விரைந்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். வழக்கமான நடைமுறைகளுக்கு ஏற்ப விசாரணை நடைபெறும் என அவர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications