அபராத தொகை ரூ50000 அபேஸ்-ஏட்டு மீது வழக்கு
மதுரை: அபராதத் தொகை ரூ.50,000யை நீதிமன்றத்தில் செலுத்தாமல் அபேஸ் செய்த ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடிதடி போன்ற சிறிய வழக்குகளுக்கு போலீஸார் அபராதம் விதிப்பது வழக்கம். இதுபோன்ற வழக்குகளில் வசூலாகும் அபராத தொகையை மொபைல் நீதிமன்றத்தில் செலுத்திவிட வேண்டும்.
மதுரை புதூர் காவல் நிலைய ஏட்டாக பணிபுரிபவர் சேகர். அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் போலி ரசீதுகளை பயன்படுத்தி சுமார் ரூ.50,000 வரை சேகர் மோசடி செய்தது கண்டுபடிக்கப்பட்டது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஏட்டு சேகரிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேகர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். பின்னர் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஏட்டு சேகர் மீது மாநகர குற்றப்பிரிவில் புகார் செய்தார். சேகர் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.