காவல் நிலையத்தில் வாலிபர் நிர்வாண சித்ரவதை?
ஈரோடு: வாலிபரை போலீசார் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக அவரது பெற்றோர் கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் ஒண்டிக்காரன்பாளைத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் கார்த்தி (18). ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனது. இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸில் நிர்வாகி புகார் செய்தார்.
இந்த சம்வம் தொடர்பாக ஊழியர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் கார்த்தியை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். கார்த்தியை நிர்வாணப்படுத்தி போலீசார் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்தியின் பெற்றோர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications