மீனாட்சி கோவிலுக்கு பல மடங்கு பாதுகாப்பு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து கோவிலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த பாதுகாப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முழுக் கோவிலும் போலீஸ் கட்டுப்பாட்டில!
மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் பெருமளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண உடை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலின் ஐந்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 நுழைவாயில்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற 3 நுழைவாயில்களும் மூடப்பட்டுள்ளன.
பக்தர்கள் அனைவரும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.
கோவிலுக்குள் 24 மணி நேர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கோவில் வளாகத்தைச் சுற்றிலும் 24 மணி நேர ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் குழுவினர் கோவிலுக்குள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், கன்னியாகுமரி குமரி அம்மன் கோவில் ஆகியவற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்ைககளில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications