For Daily Alerts
Just In
பாஜக நிர்வாகிக்கு மிரட்டல்-அதிமுக புள்ளி கைது
திருச்சி: பாஜக நிர்வாகிக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் மேலக்கொண்டயம் பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஸ்ரீரங்கம் மண்டல பாஜக செயலாளராக உள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.
அப்போது, மாரிமுத்து ஆபாசமாக பேசி விஜயக்குமாருக்கு மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் செய்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், மாரிமுத்துவை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Story first published: Saturday, September 27, 2008, 12:12 [IST]