மது விலக்கு: பாமக-அதிமுக-மதிமுக பங்கேற்பு
சென்னை: சென்னையில் நடந்த மதுக் கொள்கை விளக்க கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நல்லாட்சிக்கான குடிமக்கள் கூட்டமைப்பின் சார்பில் மது விளக்க செயல் கூட்டம் நடந்தது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்று கூறினால், அங்கு அரசு இல்லை, நிர்வாகம் இல்லை, காவல்துறை இல்ைல என்றுதான் பொருள்.
1991ல் இருந்த அரசு (ஜெயலலிதா அரசு) கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பாக ஒரு சட்டத்ைதக் கொண்டு வந்தது. அந்த சட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை.
அக்டோபர் 2ம் தேதியன்று காந்தி ஜெயந்தி நாளிலாவது சாராய ஒழிப்பு குறித்த நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
மது விலக்கு தொடர்பாக தேசிய அளவில் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் அரசியல் கூட்டணிகளில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பாமக, அதிமுக, மதிமுக தலைவர்கள் ஓரணியில், ஒரே மேடையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.