ஐநா பாதுகாப்பு கவுன்சில்-மாற்றம் வேண்டும்: சிங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தீவிரவாதத்தை எதிர்த்து போராட சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம். ஐநாவின் பாதுகாப்பு கவுன்லில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐநாசபையின் 63வது பொதுக் குழுவில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் நிதியுதவி, அவர்களுக்கு ஆதரவு அளிப்போர் மீது சட்டப்படி தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

21ம் நூற்றாண்டின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றங்களும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். பயங்கரவாதத்தை எதிர்த்து போராட சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம்

சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான ஒருங்கிணைந்த மாநாட்டை நாம் விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவசியம்.

சமீபத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி, அகமதாபாத், பெங்களூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. வளர்ந்து வரும் தீவிரவாதத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் கவலை அளிக்கின்றன என்றார் மன்மோகன் சிங்.

--

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+