'சின்னாபின்னமான' சின்னாளபட்டி பேரூராட்சி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மோதலால் பேரூராட்சி கூட்டம் போர் களம் போல் காட்சி தந்தது.
இந்தப் பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் நிலவி வரும் மின் வெட்டை கண்டித்து அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் 4 பேர் அரிக்கேன் விளக்குகளுடன் கூட்டத்திற்கு வந்தனர்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த அரிக்கேன் விளக்குகளை பறித்து தரையில் வீசி உடைத்து சின்னாபின்னமாக்கினர்.
இதனால் ஆவேசம் அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர்கள் மீது பாய்ந்து தாக்கினர். பதிலுக்கு அதிமுக கவுன்சிலர்களை திமுக கவுன்சிலர்கள் தாக்கினர்.
மேலும் இரு தரப்பினரும் பேரூராட்சி நாற்காலிகளை போட்டு உடைத்தனர்.
மக்கள் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டிய மாண்புமிகு இடத்தில் தனிமனித வெறுப்புகளை மனதில் வைத்து அடிதடியில் இறங்கி பொது சொத்துக்களை நாசம் செய்வது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications