மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியா?-மன்மோகன்
அமெரிக்கா-பிரான்ஸ் பயணதத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானத்தில் இன்று டெல்லி திரும்பிய பிரதமர், விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:
பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர் யார் என்பது பற்றி பேசுவதற்கான அவசரம் தற்போது எழவில்லை. மீண்டும் நான் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு சிந்திக்கவும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் என்னைப் போலவே அல்லது என்னை விடவும் தகுதி வாய்ந்த பல தலைவர்கள் உள்ளனர்.
உலகளாவிய நிதி நெருக்கடியில் இருந்து இந்திய நிதி சந்தையைக் காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மாற்றப்படுவாரா என்ற கேள்விக்கு, இது பத்திரிகையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் விஷயம் அல்ல என்று பதிலளித்தார்.
பிரதமராக ராகுல் காந்திக்கு 100 சதவீதம் தகுதி உள்ளது என மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ள நிலையில், பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.