For Daily Alerts
Just In
இன்போசிஸ் வளாகத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை
மைசூர்: மைசூரில் உள்ள இன்போசிஸ் அலுவலக வளாக ஹாஸ்டலில் தங்கியிருந்த இளம் பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூஜா பாட்டீல் (23). இவர் மைசூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில், குளோபல் லீடர்ஷிப் பயிற்சி மையத்தில் பயிற்சி பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இன்போசிஸ் அலுவலக வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நேற்று அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
அவருடன் தங்கியிருக்கும் அறைத் தோழியான ஸ்ரீஜா பட்நாயக் இரவில் அறைக்கு திரும்பியபோதுதான், பூஜா பாட்டீல் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பூஜாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Tuesday, October 7, 2008, 11:08 [IST]